Header Ads



3 வயது ஆண்குழந்தை மீது, பாலியல் துஷ்பிரயோகம், 14 வயது சிறுமி கைது - இலங்கையில் அதிர்ச்சி

மூன்று வருடங்களும் 07 மாதங்களுமான ஆண் குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

14 வயதுடைய சிறுமியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆரச்சிகட்டுவ வேரன்கட்டு பிரதேசத்தினை சேர்ந்த ஆண் குழந்தையின் தாயினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hiru News

No comments

Powered by Blogger.