Header Ads



கடலில் நீராடிய 2 பேர் உயிரிழப்பு

திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மனையாவெளி கடல் பகுதியில் நேற்று மாலை நீராடசென்றவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றொருவரை இதுவரை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று மாலை எட்டு இளைஞர்கள் கடலில் குளிக்கச் சென்றுள்ளதுடன், அதில் இருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். 

பின்னர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதுடன், மற்றொரு இளைஞரை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

16 வயதுடைய சு.சிந்துஜன் என்பவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதுடன், 22 வயதுடைய கிறிஸ்டியை தேடும் பணியை கடற்படையுடன் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் தொடர்கின்றனர். 


No comments

Powered by Blogger.