Header Ads



24 மணிநேரம் அவகாசம் - இன்று நள்ளிரவுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 24 மணிநேரம் கால அவகாசம் வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன, பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியமைப்பதற்குரிய அனுமதியை வழங்குவேன் என்றும் உறுதியளித்துள்ளார்

இவ்வாறானதொரு பின்புலத்தில் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நேற்று சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களைச் சந்தித்த ஜனாதிபதி, ""நான் நடுநிலையாகவே இருக்க விரும்புகின்றேன். அரசியல் பதற்றமானது நாட்டுக்கு அனைத்து விதத்திலும் பாதகமாக அமைந்துவிடும். எனவே, இன்று வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்குவேன்'' என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.