Header Ads



குவைத்தில் 15,000 இலங்கையர்களுக்கு விசா இல்லை

விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 22ம் திகதியுடன் முடிவடைகின்றது.

இந்தப் பொது மன்னிப்புக்காலத்தைப் பயன்படுத்தி நான்காயிரத்திற்குத் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் 800 பேர் நாடு திரும்பத்தயாராகி வருகின்றனர்.

சுமார் 15,000 இலங்கை ஊழியர்கள் உரிய விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் தங்கியிருப்பதாக அமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.