Header Ads



கூட்டை கலைத்த கழுகு, தொழிலாளர்களை கொத்திய குளவிகள் - 12 பேருக்கு சிகிச்சை

ஹட்டன் டிக்கோயா மெணிக் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது , காயமடைந்த 12 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவற்துறையினர் தெரிவித்தனர்.

மரமொன்றில் இருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று தாக்கியதில் குளவி கலைந்துள்ளது

இதேவேளை , டயகம - நக்போன் தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்காகி 10 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான அவர்கள் டயகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் மேலதிக சிகிச்கைகளின் பொருட்டு நுவரெலியா மாட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது

No comments

Powered by Blogger.