Header Ads



பழைய அமைச்சரவை, நாளை கூடுகிறது - தீர்மானம் நிறைவேற்ற 10 பேர் நியமனம்

-DC-

நாட்டிலுள்ள அரசியல் நிலவரம் தொடர்பில் நாளைக்குள் தீர்மானம் ஒன்றை அறிவிக்குமாறு தெரிவித்து 10 பேர் அடங்கிய விசேட குழுவொன்றை அமைக்க இன்று (13) இரவு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சற்று முன்னர் நிறைவடைந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்காது சென்ற அமைச்சர்கள் பலரிடையே, ஊடகவியலாளர்களின் பகீரத முயற்சியினால் நிறுத்தப்பட்ட அமைச்சர் சஜித் பிரேமதாக ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்.

நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், உடனடியாக இக்குழு அறிவிக்கப்படும் எனவும், நாளைய தினமே இக்குழு கூடி உரிய தீர்மானங்களை அறிவிக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.