தேர்தலின் பின்னர் UNP யின் பலர், சுதந்திர கட்சியில் இணையவுள்ளனர் - துமிந்த
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அரசாங்கத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் உள்ளதாகவும், எதிர்வரும் தேர்தலின் பின்னர் இவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நாம் தேசிய அரசாங்கத்தை அமைத்தது நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகும். இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள புத்திஜீவிகள் சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Dc
Post a Comment