SLFP வாய்களை கட்டுப்படுத்த ஜனாதிபதியும், UNP யை அடக்க பிரதமரும் இணக்கம்
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதால் நல்லாட்சி அரசில் இருக்கும் ஐ.தே.க மற்றும் சு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே பதிப்பு ஏற்படும். கீரியும் பாம்பும் போல இருந்த இரு கட்சிகள் ஒன்றாக இருந்தால் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். அதற்காக ஆட்சி கவிழும் என யாரும் கனவு காண முடியாது என இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதியை விமர்சிக்கும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடக்கமாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவதாக பிரதமர் அமைச்சரவையில் உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்டதாக கூறினார். சு.க தரப்பினரின் வாய்களை கட்டுப்படுத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Absolutely correct both parties members should be controlled their way of talking immediately.
ReplyDelete