Header Ads



இந்தியாவின் புதிய செய்மதி மூலம், இலங்கை இராணுவ செயற்பாடுகளை கண்காணிக்க முடியும்

இந்தியாவினால் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ள புதிய செய்மதியின் மூலம் இலங்கையின் இராணுவ செயற்பாடுகளை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டு விஞ்ஞானிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் இன்று தமது 100வது செய்மதியை விண்ணில் ஏவியது.

அதனுடன் மேலும் 30 செய்மதிகள் ஏவப்பட்டன.

இவ்வாறு ஏவப்பட்ட செய்மதியைக் கொண்டு, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், சீனா உள்ளிட்ட நாடுகளின் இராணுவ செயற்பாடுகளை இந்தியா கண்காணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.