வஸீம் படுகொலை, மஹிந்த குடும்பத்துடன் நெருக்கமானவர்களிடம் விசாரணை
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலை தொடர்பிலான விசாரணைப் பிரிவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் குடும்பத்தாருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சி.எஸ்.என். அலைவரிசையின் முன்னாள் முகாமையாளர் யசாரா அபேநாயக்க உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளது.
இந்த ஒன்பது பேரில் மஹிந்த குடும்பத்தாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு மேலதிகமாக அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் மற்றும் கடற்படை உறுப்பினர்களும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வஸீம் தாஜுதீன் படுகொலையின் பின்னர் கொலைக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணைகளில் பெரிதும் பெயர் குறிப்பிடப்பட்ட யோசித்த ராஜபக் ஷவின் முன்னாள் காதலி எனக் கூறப்படும் யசாரா அபேநாயக்க மற்றும் சரத் கீர்த்தி குமார, மஹதுரகே இந்திக துஷார, சஞ்சய நவரட்ண, துமிந்த நவரத்ன, சமிந்த பிரியதர்ஷன, ஜயந்த குமார, பேர்ட்டி டைடர்ஸ், அஜித் குமார கபில ஆகியோரே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் வஸீம் தாஜுதீனின் கொலையாளிகளை துரிதமாகக் கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவின் நேரடி மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக மனிதப் படுகொலை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க உப பொலிஸ் பரிசோதகர் ரத்னபிரிய ஆகியோர் அடங்கிய குழுவினர் பல்முனை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த துரித விசாரணை பெப்ரவரி 10யுடன் முடிவடைந்து அடுத்த தேர்தல் திகதி தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டவுடன் ஆரம்பித்து அந்த தேர்தல் முடிவடைவதுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ReplyDeleteYes very true
ReplyDeleteஇலங்கையினுடைய நீதி விசாரணை
ReplyDeleteநடைமுறைகள் மிகவும் ஆள அகலமான
விசாரணகைள் நிறைந்ததாகும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துகொள்ளலாம்
ஆனால் ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக்கூடாது என்ற நியதியிலே
இங்கு விசாரணைகளும் தீர்ப்புகளும்
நடந்து கொண்டிருக்கன்றன. எனவே
ஒரு குற்றம் சம்பந்தமான சாட்சிகளையும்,தடயங்களையும் ஆதாரங்களையும் சரியாகவும் உண்மைத்தன்மைகவும்
நீதிமன்றத்திலே முன்வைத்து அவைகளை குற்றவாளிகளுக்கு எதிராக நரூபிக்க வேண்டிய
தேவை அதைபுலனாய்வு செய்கின்ற
வர்களுக்கும்,பொலிசாருக்கும்,சட்டமா
அதிபர் திணைக்களத்திற்கும் கடமையாக உள்ளது.இல்லா விட்டால்
குற்றவாழி எளுதில் தப்பித்துக்கொள்வான். இந்த அடிப்படையிலே வசீம் தாஜுதீன் போன்ற முக்கியமானவர்களின் வழக்குகளில் காலதாமங்கள் ஏற்படுகின்றவேதவிர அரசியல் தலையீடுகளால் அல்லது வேறு Influence மூலமாக இவைகள் தாமதமாகின்றன என
கொள்ளமுடியாது.நீதிவிசாரணை, மற்றும்
சட்ட சிக்கல்களில் ஏற்படும் தாமதங்களை
குறைப்பதற்கு வேறு மார்க்கங்களை கையாள்வது பற்றி அண்மைக்காலங்களில் ஜனாதிபதி அவர்கள் தமது நிலப்பாடுகளை தெரிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.