Header Ads



மகிந்த டீமின் பிரச்சாரத்தில், பங்கேற்ற பாதாளக் குழுவின் உறுப்பினர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் அவரிடம் சந்தேகத்துக்கு இடமான அடையாள அட்டையொன்றையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ரத்னவீர என்ற பாதாள குழுவைச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் ​தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.