அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு
அமைச்சரவை கூட்டம் இன்றைய -23- தினம் நடைபெற மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றைய தினம் இடம்பெறவிருந்த அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும் ஈடுபட்டுள்ளதனால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் கட்சி வேட்பாளர்கள் குழப்பமான சூழ்நிலைகளை ஏற்படுத்தாமல் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment