Header Ads



இலங்கையில் குளிரான காலநிலை

எதிர்வரும் சில நாட்களுள் நாட்டின பல பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளையும் குளிரான காலநிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனுடன் நுவரெலிய மாவட்டத்தில் சில இடங்களில் பனிபொழிவும் ஏற்படக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் பிரதமாக மழையுடன் கூடி காலநிலையே நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களுடன், ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனுடன் நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளை பனிமூட்டம் காணப்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.