Header Ads



தேர்தல் வரை பொறுமை, அதன்பின்னர் நடப்ப‍தனை பார்ப்போம் - ஐ.தே.க

தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வசமுள்ள பொருளாதார முகாமைத்துவத்தை தான் எடுக்க போவதாக ஜனாதிபதி பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார். எனினும் இவ்வாறான கருத்துகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் அவ்வாறு பேசுவதற்கும் செயற்படுவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண உரிமை உள்ளது. என்றாலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவு பெறும் வரை எமது கட்சியினர் பொறுமையாக இருக்க வேண்டும். அதன்பின்னர் நடப்ப‍தனை பார்ப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி வசமுள்ள பொருளாதார முகாமைத்துவத்தை தாம் இவ்வருடம் முதல் தம்வசம் வைத்துக்கொள்ள போவதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பிலும் சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.