இலங்கையில் நாய்கள் வேட்டையாடிய, விலங்குகளின் இறைச்சியை விநியோகித்தவர்கள் கைது
நாய்களை ஈடுபடுத்தி வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றை இறைச்சியாக்கி சீன உணவகங்களுக்கு விற்பனை செய்துவந்த சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய மேற்கொள் ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே நாத்தாண்டியா – பண்டாரநாயக்கபுர பிரதேசத்திலுள்ள குறித்த இறைச்சி தயாரிப்பு நிலையத்தினை சுற்றிவளைத்துள்ளனர்.
பண்டாரநாயக்கபுர பிரதேசத்திலுள்ள வனப்பகுதிகளிலிருந்து இச்சந்தேகநபர்கள் குறித்த விலங்குகளை வேட்டையாடியுள்ளதாகவும், அவ்வாறு வேட்டையாடப்பட்ட சுமார் 22 கிலோகிராம் நிறைக்கொண்ட முள்ளம்பன்றி மற்றும் 1 கிலோகிராம் நிறையுடைய ஆமை இறைச்சிகளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் லுணுவில – மிரிஸ்ஸன்கொடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் நாய்களை ஈடுபடுத்தி காட்டுவிலங்குகளை அச்சுறுத்தி அவை பயந்து ஓடும்போது, அவற்றை ஓரிடத்தில் சுற்றிவளைத்து பொல்லுகளால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(ரெ.கிறிஷ்ணகாந்)
Post a Comment