பொய்யான வாக்குறுதிகளால், அரசியல் சீரழிந்துள்ளது - அனுரகுமார
மக்கள் சேவையான அரசியல், பொய்யான வாக்குறுதிகளால் சீரழிந்து போய் உள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் தொடர்பில் மக்கள் தற்போது நம்பிக்கை இழந்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றுவது இல்லை.
மோசடிகளில் ஈடுபடுவதற்காக மக்கள் யாருக்கும் வாக்களிப்பதில்லை.
கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனினும், அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளதாகவும் ஜே.வி.பி. இன் தலைவர் குறிப்பிட்டார்.
Post a Comment