Header Ads



பங்களாதேஸுடன் வெற்றிபெற்றால், இலங்கைக்கு இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு

பங்களாதேஸில் நடைபெறும் மும்முனை ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில், பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில், பங்களாதேஸ் அணி வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற நிலையில் பங்களாதேஸ் அணி முக்கோண தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனிடையே எதிர்வரும் வியாழக்கிழமை பங்களாதேஸ் அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் பங்களாதேஸூடன் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தால் இறுதிப்போட்டிக்காக இணையும் அணி தொடர்பில், இலங்கை மற்றும் சிம்பப்வே அணிகள் பெற்றுள்ள சராசரி புள்ளிக்கமைய தெரிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.