Header Ads



இளவரசர் எட்வர்ட் இலங்கை வந்தடைவு, சுதந்தின தின நிகழ்வில் பங்கேற்பார்

70வது சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் எட்வர்ட் இன்று -31- இலங்கை வந்தடைந்தார்.

இன்று மதியம் 12.40 மணியளவில் அவர் இலங்கை வந்தடைந்தார்.

இவர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதி வரை இந்நாட்டில் தங்கவுள்ளனர்.

எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார்.  

பிரித்தானிய அரச குடும்பத்துக்கான அழைப்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சால் அனுப்பப்பட்டுள்ளது.  

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உறுப்பினராக இணைந்துக்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பை ஆரம்பித்தவர் எலிஸபெத் மகாராணியாவார்.  

இதேவேளை, 1998ஆம் ஆண்டு இலங்கையின் 50ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள மகாராணியின் இரண்டாவது புதல்வர் சார்ள்ஸ் வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

1 comment:

  1. This is not Sri Lanka's 50th independence day, this 70th.

    ReplyDelete

Powered by Blogger.