Header Ads



சட்­டமா அதிபர் + பொலிஸ் திணைக்களங்களை ஜனாதிபதி கைப்பற்ற வேண்டும்

மத்­திய வங்கி மோசடி குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்­டு­மாக இருந்தால் பொலிஸ் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளங்­களை ஜனா­தி­பதி தன்­வசம் எடுத்­துக்­கொள்­ள­ வேண்டும் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிஷ மக்கள் முன்­னணி  கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

மத்­திய வங்­கியில் பாரிய மோசடி இடம்­பெற்று 3 வரு­டங்கள் கடந்­துள்­ளன. குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக இன்னும் சட்டம் நிலை நாட்­டப்­ப­ட­வில்லை. ஆனால் நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்து செல்­வ­தாக தெரி­வித்து ஜனா­தி­பதி பொரு­ளா­தா­ரத்தை தனக்கு கீழ் கொண்­டு­வ­ரு­வ­தாக தெரி­வித்­துள்ளார். பொரு­ளா­தா­ரத்தை தனக்கு கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முன்னர் பொலிஸ் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளங்­களை ஜனா­தி­பதி தனது கட்­டுப்­பாட்­டின் கீழ் கொண்­டு­வர வேண்டும். அதன் மூலமே பிணை­முறி மோசடிக்காரர்­க­ளுக்கு எதி­ராக சட்டம் நிலை­நாட்­டப்­படும். அத்­துடன் பிணை­முறி மோசடி இடம் ­பெற்று விசா­ர­ணை­களும் முடி­வ­டைந்­துள்­ளன.  அறிக்கை திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ரவி கரு­ணா­நா­யக்க தெரி­விக்­கின்றார்.

இது தொடர்பில் பிர­தமர் எந்தப் பதிலும் இது­வரை தெரி­விக்­க­வில்லை. அதே­நேரம் அறிக்கை தொடர்­பாக பிர­தமர் நாட்­டு­மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் நட்­ட­மாக்­கப்­பட்ட நிதியை மீள பெற்­றுக்­கொள்ள முடியும் என தெரி­வித்­துள்­ளதன் மூலம் பிணை­மு­றியில் அவ­ருக்கு தொடர்­பி­ருப்­ப­தாக தெரி­வித்து வந்த சந்­தேகம் மேலும் உறு­தி­யா­கின்­றது.அத்­துடன் மோசடி செய்­யப்­பட்ட நிதியை மீளப்பெற்­றுக்­கொள்­வது அல்ல தற்­போது இருக்கும் பிரச்­சினை. மோச­டி­யுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் நீதி­மன்­றத்தின்  முன் நிறுத்­தப்­பட்டு நீதி­மன்­றமே அது தொடர்பில் தீர்ப்­ப­ளிக்­க­வேண்டும். அத்­துடன் மோசடி செய்­யப்­பட்ட பணத்தை மீள பெற்­றுக்­கொள்­ளலாம் என பிர­தமர் தெரி­வித்­துள்­ளதன் மூலம் அவர் இந்த பிரச்­சி­னையை  குற்­ற­வியல் விவ­காரம் அல்­லாமல் சிவில் பிரச்­சி­னை­யாக திசை திருப்­பு­வ­தற்கு முயற்­சிக்­ கின்­றாரா என்ற சந்­தேகம் எழு­கின்­றது.

எனவே மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்தும் அதி­காரம் இருப்­பது பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வுக்­காகும். அத்­துடன்  இதற்கு எதி­ராக வழக்கு தொடு க்கும் அதி­காரம் இருப்­பது சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்­காகும். ஆனால் இந்த திணைக்­க­ளங்கள் அனைத்தும் பிரதமரின் ஆலோ சனையின் பிரகாரம் இடம்பெறுவ தால் இவை சுதந்திரமாக செயற்படும்   சாத்தியம் இல்லை. அதனால் பிணைமுறி விசாரணை நீதி யாக இடம்பெற வேண்டுமாக இருந்த ால் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களங்களை ஜனாதிபதி தனக்கு கீழ் கொண்டுவரவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.