தேர்தலுக்கு பின் எந்தவகையிலும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைவு கிடையாது
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் அவசியம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்றைய -25- தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகழை குறைக்க பல்வேறு பேச்சுவார்த்தைகள் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்களும் மேடைகளில் பொய்யாக ஒருவருக்கு ஒருவர் விமர்சித்து கொள்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி தற்போது புதிய நடிப்பை வெளிக்காட்டி வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தலுக்கு பின்னர் எந்த வகையிலும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையாது.
மக்கள் விடுதலை முன்னணி கட்டாயம் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment