Header Ads



இப்படியும் ஒரு எம்.பி. - மக்களை சந்தித்த பின், கை கழுவுகிறாராம்..!

பார்லிமென்ட் எம்.பி. ஒருவர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. குறித்த எம்.பி. பொதுமக்களை சந்தித்துவிட்டு வாகனத்தில் ஏறியவுடன் டெட்டோல் இட்டு கையை துடைத்துக்கொள்வாராம். இதற்காக விசேடமான ஏற்பாடுகள் வாகனத்தில் உள்ளதாம்...

நீண்ட நாட்களாக இதனை அவதானித்த எம்.பியின் நண்பர் ஒருவர் இதனை மற்றவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டாராம். மக்களிடம் பரிதாபமாகப் பேசும் அரசியல் பிரமுகரான இந்த எம்.பி. மக்களை மனதுக்குள் எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் இப்போது பேசப்படுகிறது. இந்த எம்.பி. கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெயரை மட்டும் கேட்டுவிடாதீர்கள்... "மய'ங்கிப் போவீர்கள்.

-S0-

No comments

Powered by Blogger.