Header Ads



இலங்கையில் செயற்கை மழையை, பெய்விக்க நடவடிக்கை

இலங்கையின் விவசாயத்துறையில் பெரும் புரட்சியொன்றை ஏற்படுத்தும் வகையில் செயற்கை மழை பெய்விக்கும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க தாய்லாந்து விருப்பம் கொண்டுள்ளது.

இலங்கைக்கான தாய்லாந்து நாட்டின் புதிய தூதுவராக சூலமணி சட்சுவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை தாய்லாந்தின் புதிய தூதுவர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன் போது விவசாய நீர்ப்பாசனத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய செயற்கை மழை பொழிவிக்கும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க தாய்லாந்து அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளதாக அந்நாட்டின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாய்லாந்து நாட்டு அரசரின் விருப்பத்தின் பிரகாரம் இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தாய்லாந்து தயாராக இருப்பதாகவும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.