Header Ads



தரை ஆகாயமாக சென்று தாக்கும் ஏவுகணையை, வெற்றிகரமாக பரிசோதித்த பாகிஸ்தான்


தரை மற்றும் ஆகாய மார்க்கமாக சென்று தாக்கும் கடற்படை ஏவுகணையை இன்று -03-  வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தரை மற்றும் ஆகாய மார்க்கமாக சென்று தாக்கும் கடற்படை ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

‘ஹர்பா’ என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ். ஹிம்மத் என்ற போர் கப்பலில் இருந்து ஏவப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடற்படை தளபதி ஸாபர் மஹ்மூத் அப்பாசி முன்னிலையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை எந்த பகுதியில் இருந்து ஏவப்பட்டது? எவ்வளவு தூரம் பறந்து சென்று தாக்கியது? என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

No comments

Powered by Blogger.