Header Ads



யானையை கொன்று தீயிட்டு எரித்­த­வர் கைது - காரணம் எனன..?

தனது சேனைக்குள் நுழைந்த யானை ஒன்றைக் கொன்று தீயிட்டு எரித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தில் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக மொர­கொட பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அநு­ரா­த­புரம், உண­கொல்­லேவ பிர­தே­சத்தைச் சேர்ந்த இச்­சந்­தேக நபர் தனது சேனையில் சோளச் செய்­கையில் இவர் ஈடு­பட்­டுள்ளார் இந்­நி­லையில் காட்­டு­யா­னைகள் தனது சேனைக்குள் நுழைந்து பயிர்­களை நாசம் செய்­வ­தனால் அவர் ஆத்­தி­ர­முற்­ற­வ­ராக காணப்­பட்­டுள்ளார்.

இந்த நிலையில் அண்­மையில், சந்­தேக நப­ரான விவ­சாயி தனது சேனையில் காவல் காக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, சோளச் சேனை­யினுள் காட்­டு­யா­னை­யொன்று நுழைந்­துள்­ளது. அதன் போது அந்­நபர் துப்­பாக்கிச் சூடு நடத்­தியோ அல்­லது மின்­சாரம் செலுத்­தியோ கொலை செய்­துள்ளார் எனவும் அதன்­பின்னர் உயி­ரி­ழந்த யானையை துண்­டங்­க­ளாக வெட்டி தீயிட்டுக் கொளுத்­தி­யுள்­ள­தா­கவும் மொர­கொட பொலி­ஸா­ருக்கு தகவல் ஒன்று கிடைத்­துள்­ளது.

அதற்­க­மைய, மொர­கொட பொலிஸார் உண­கொல்­லேவ பிர­தே­சத்­தி­லுள்ள குறித்த சோளச் சேனைக்கு சென்று கடந்த 20 ஆம் திகதி சோத­னை­யிட்­ட­போது, சேனையில் ஆங்­காங்கே யானை­யி­னது என கரு­தப்­படும் எலும்புத் துண்­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து சந்­தேக நப­ரான சேனை உரி­மை­யா­ளரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இச்­சந்­தேக நபர் யானை­யைக்­கொன்று, இறப்பர் டயர்­களை பயன்­ப­டுத்தி அதனை எரித்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர். இந்­நி­லையில், கைது செய்­யப்­பட்ட சந்தேக நபரை அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.