Header Ads



கனேடிய தூதுவர், திருகோணமலை முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பு


-ஹஸ்பர் ஏ ஹலீம்-

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கினன் நேற்று (18) திருகோணமலைக்கு விஐயம் செய்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக காணிப்பிரச்சினை இம்மாவட்ட முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பாரிய பிரச்சினையாகும்.

மேலும் நிர்வாக ரீதியாக எதிர் கொள்ளும் பிரச்சினைகள், வன பரிபாலன திணைக்களம்.வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றின் பிரச்சினைகள், மொழிப்பிரயோக பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டது.

இதில் கிண்ணியா ஜம்மமியத்துல் உலமா சபை மற்றும்ஷூறா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயதுள்ளாஹ் நளீமி, செயலாளர் எம்.எஸ்.எம்.நியாஸ், ஆதம்பாவா தெளபீக், ஏ.டபிள்யூ ஜிஹாத், எம்.சஜீத் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.

No comments

Powered by Blogger.