Header Ads



மடு தேவா­ல­யம் அருகில் பௌத்த விகாரை, மிகப்பெரிய அவ­ம­ரி­யாதையாம்..!

மன்னார் மடு தேவா­லய நுழை­வாயில் அரு­கா­மையில் இரா­ணுவத்தி­னரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கும் எடுக்கும் முயற்­சியை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கூறி மன்னார் பிர­ஜைகள் சங்­கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலா­சார அமைச்­ச­ருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்­வைத்­துள்­ளன. 

இந்த இடத்தில் சிற்­றுண்­டி­ச்சாலை ஒன்றை நடத்­தி­வரும் இரா­ணுவத்தினர் குறித்த இடத்தில் உள்ள மரத்­திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக கூறும் மன்னார் பிர­ஜைகள் சங்கங்கள் இந்த இடத்தில் இவ்­வா­றான செயலை செய்ய ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. அது மடு தேவா­ல­யத்­திற்கு செய்யும் மிகப் பெரிய அவ­ம­ரி­யாதை எனவும் குறிப்­பிட்­டுள்­ளன. 

இப்­போ­தைக்கும் இவ்­வி­டத்தை வணக்க வழி­பா­டுகள் நடத்தும் இட­மாக இரா­ணுவத்தினர் மாற்­றி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள பிர­ஜைகள் சங்கங்கள் பிர­பல கிறிஸ்­தவ தேவா­லயம் உள்ள இடத்தில் இவ்­வா­றான செயலை அனு­ம­திக்க முடி­யாது என குறித்த கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

வடக்கில் பல இடங்­களில் புத்தர் சிலை­களை வைத்து வணக்க வழி­பா­டுகளில் ஈடு­ப­டு­கின்ற இரா­ணுவத்தினர், அவ்­வி­டத்தை விட்டு செல்லும் போது, சிலை­களை அகற்­றாமல் செல்­வதன் மூலம் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சினை, தேசிய ரீதி­யான பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுப்­பதால் இந்த இடத்தில் புத்தர் சிலையை வைப்­ப­தற்கு முன்னரே இச்செயற்பாட்டை நிறுத்தநடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டும் வட மாகாண சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

4 comments:

  1. சரிதான். பறவைகளால் விதைக்கப்பட்டு முளைக்கும் அரசமரங்களும், இராணுவ பொலீஸ் கேம்ப்களில் சிறிதாக வைக்கப்படும் புத்தர் சிலைகளும் காலப்போக்கில் அந்தஇடத்தை விகாரைக்குரிய இடமாக மாற்றிவிடுகிறது.

    ReplyDelete
  2. எங்கே நம் அந்தோணி அஜன்.

    ReplyDelete
  3. மன்னார் மாவட்ட தமிழ் கிருஸ்துவ பயங்கரவாதிகளின் ஆட்டம் அடங்க இதெல்லாம் கொஞ்சம் அவசியம்

    ReplyDelete
    Replies
    1. இல்லை Gt x இங்கு உள்ளவர்களின் மடத்தனத்துக்காக ,நாம் கண்ணைமூடி அனைத்தையும் சரிகாணக்கூடாது. அனீதியை ஆதரிக்கவே கூடாது. இன்றுஅவருக்கு நாளை நமக்கு(அல்லாஹ் பாதுகாப்பானாக) எனும் தூரநோக்கு அவசியம்.

      Delete

Powered by Blogger.