சூட்சுமமான எரிபொருள், திருடர்கள் சிக்கினார்கள்
-ஆர்.மகேஸ்வரி-
இலங்கை எரிபொருள் கூட்டுதாபனத்துக்குரிய எரிபொருளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முல்லேரியா, களனிமுல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பௌசர் வாகனம் மூலம் கொண்டு செல்லப்படும் எரிபொருளை மிகவும் சூட்சுமமான முறையில் வேறொரு பௌசர் வாகனத்துக்கு மாற்றி பின்னர் மிகுதியுள்ள எரிபொருளுடன் தரமற்ற எரிபொருளை நிரப்பி விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 வருடமாக சந்தேகநபர்கள் குறித்த திருட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கம்பளை, பேராதனை, ருவன்வெல மற்றும் ஹட்டனைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Post a Comment