Header Ads



அவ்­வாறு செய்தால், பிரதமர் ஆகிறார் மஹிந்த


உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன அதி­க­ள­வான உள்ளூர் அதி­கார சபை­களின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­மா­க­வி­ருந்தால் எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­திற்கு முன்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக்கிக் காட்­டு­வ­தாக கூட்டு எதிர்க்­கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டலஸ் அளகப் பெரும தெரி­வித்தார்.

மாத்­தறை உயன்­வத்­தையில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வத்­துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் ஆட்சி மாற்­றத்­திற்­கான தேர்தல் இல்­லை­யென்றும் அது உள்ளூர் அதி­கார சபை­களின் அதி­கா­ரத்தை தீர்­மா­னிக்கும் தேர்தல் மாத்­திரம் எனவும்  அர­சாங்கம் தெரி­வித்து வரு­கி­றது. எனினும் எதிர்­வரும் பெப்­ர­வரி 10 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லா­னது மிகவும் தீர்க்­க­மா­ன­தாக அமை­ய­வுள்­ளது.

நாடு பூரா­கவும் 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உள்­ளன. அவற்றில் வடக்கு, கிழக்­கிற்கு வெளியில் 274 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உள்­ளன. எனவே அம்­மன்­றங்­களின் அதி­கா­ரத்தை தேர்­தலில் ஸ்ரீலங்கா  பொது­ஜன பெர­மு­ன­விற்கு வழங்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம். 

அவ்­வாறு செய்தால் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஒன்­பதாம் திகதி நடை­பெற்­ற­துபோல் எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­திற்கு  முன்னர், பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை  பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை அப்­ப­த­வியில் அமர்த்­துவோம். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிரதமாக்கிய பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் சரிவைச் சந்தித்துள்ள நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை துரிக கதியில் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.