Header Ads



அரசுக்கு எதிரான சில சக்திகள், புலனாய்வுச் சேவை எச்சரித்தது

பெண்களுக்கு மதுபான விற்பனை மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கமர்த்த அனுமதி வழங்கிய அரசின் தீர்மானத்துக்குப் பின்னால் அரசுக்கு எதிரான சில சக்திகள் இருப்பதாக தேசிய புலனாய்வுச் சேவை அரச தலைமையை எச்சரித்துள்ளது எனக் கேள்வி.

இதனையடுத்தே நிதி அமைச்சின் அந்தத் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு அரச தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். தேர்தல் நெருங்கும் காலத்தில் இப்படியான தீர்மானமொன்றை அறிவித்தால் அரசுக்கு அபகீர்த்தி வரும் என்பதால் சில தீய சக்திகளின் மறைமுக தூண்டுதலால் இப்படி தீர்மானம் அறிவிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளதாம்.

இப்படி தேசிய முக்கிய தீர்மானங்களை எதிர்காலத்தில் அறிவிக்கும்போது தன்னிடம் கேட்காமல் செய்யவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால பிரதமருக்கு அறிவித்ததும் இதன் பின்னணியில்தானாம்.

No comments

Powered by Blogger.