Header Ads



ஒருசில திருடர்களுக்காக, தலையில் மண்ணை அள்ளிப்போட முடியாது

-Mano Ganesan-

ஒருசில திருடர்களின் வெட்கம் கெட்ட கொள்ளை செய்கைகளுக்காக நாம் கஷ்டப்பட்டு உருவாக்கிய, இந்த நல்லாட்சி அரசை கலைத்தோ அல்லது அமைச்சரவையை கலைத்தோ எம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ள முடியாது.

பிணைமுறி விசாரணை அறிக்கையில், பலர் மீது புகார்கள் இருந்தாலும், ஒரு அரசியல் பிரமுகர், ஒரு அரச அதிகாரி, ஒரு வியாபாரி ஆகிய முவரே பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை பிணைமுறி அறிக்கை மட்டுமல்ல, மகிந்த காலத்தில் நடைபெற்ற 34 பிரதான ஊழல்கள் தொடர்பிலும் விசாரணை அறிக்கைகள் இப்போது வெளிவந்துள்ளன.

சட்டமாஅதிபர் திணைக்களம் இதையும், அதையும் என எல்லாவற்றையும் பொறுப்பேற்கும். விரைவில் அமைக்கப்படவுள்ள மூன்று விசேட நீதிமன்றங்களில் இந்த அனைத்து குற்றங்களும் தினசரி விசாரிக்கப்படும்.

இந்த கூட்டுக்களவானிகள் அனைவரையும் சிறையில் தள்ளி, கொள்ளை சொத்துகளை அரசுடைமையாக்கி, அவர்கள் அடித்த கொள்ளை நிதியை அரச திறைச்சேரிக்கு திருப்பி எடுத்து, எமது தேசிய அரசை முன்நகரும். இதில் எவருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த விஷயத்தில் எங்களுடன் எவரும் விளையாட நினைக்க கூடாது. விளையாட இது விளையாட்டு பிள்ளைகளின் அரசாங்கம் இல்லை.

No comments

Powered by Blogger.