பொல்கஹவெல மேம்பாலம் திறப்பு
பொல்கஹவெல மேம்பாலம் பொதுமக்களின் பாவனைக்காக சற்றுமுன்னர் திறக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
353 மீற்றர் நீளமான இந்த மேம்பாலம், ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
இந்த மேம்பாலம் நிர்மாணப்பணிகளுக்கு 200 கோடி ரூபா வரையிலான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், குறித்த பகுதியில் நிலவும் பாரிய வாகன நெரிசலை, குறைத்துக் கொள்ளமுடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment