Header Ads



ஜனாதிபதியிடம் இருப்பது, விளையாட்டு வாளா..?

ஜனாதிபதியிடம் இருப்பது ஒரு விளையாட்டு வாள் எனவும், திருடர்களால் திருடர்களை பிடிக்க முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மாலபே பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மைத்திரிபால என்ன கூறுகிறார். ஊழல்வாதிகளை தோற்கடிக்க வேண்டும். அரசியலை சுத்தப்படுத்தி தூய்மையாக்க வேண்டும்.

தன்னிடம் உள்ள வாளில் யார் வெட்டுப்பட போகிறார்கள் என்று தெரியாது எனவும் ஜனாதிபதி கூறுகிறார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதியிடம் இருப்பது உண்மையான வாள் அல்ல, அது விளையாட்டு வாள், அந்த வாளால் யாரையும் வெட்ட முடியாது என்று ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருடர்களால் திருடர்களை பிடிக்க முடியாது எனவும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

2 comments:

  1. Yes you are correct, it is magic saw...
    It will be long when that saw the UNPs...
    It will be short when that saw his colleagues, Mahinda & Co. and SLFP..s... No strong....forget it

    ReplyDelete
  2. RW group, MY3 group and MR group are in one and the same club only wearing different colours to have home and home competitions, but all of them want to save the 'BIG ROUGES CLUB'. They should show the people they are seriously fighting one and another so scounder and rob people's money.

    ReplyDelete

Powered by Blogger.