மோட்டார் சைக்கிளை பறிமுதல்செய்ய சென்ற, அதிகாரி அடித்துக் கொலை
மாதாந்த தவணைக் கட்டணத்தை செலுத்தாததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய சென்ற தனியார் நிறுவன அதிகாரியொருவர் இருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வென்னப்புவ - பொரலெஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ , உல்ஹிடியாவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் பொரலெஸ்ஸ பிரதேசத்தின் கிளை பாதையொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது தனியார் நிறுவன அதிகாரிகள் இருவர் குறித்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய சென்ற போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த குறித்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த கொலை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்கள் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment