Header Ads



முது­கெ­லும்­பற்­ற ஜனா­தி­பதி - கெஹ­லிய

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முது­கெ­லும்­பற்­றவர். அத­னா­லேயே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது அவர் ஸ்ரீலங்கா சுதந்­ திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­காது அக்­கட்­சியில் அங்கம் வகித்­துக்­கொண்டு தேர்­தலில் போட்­டி­யிட்டார். 

எனினும் அவர் தற்­போது கூட்டு எதிர்க்­கட்­சி­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு முது­கெ­லும்­பி­ருந்தால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­கி­விட்டு தமது அர­சி­யலை முன்­னெ­டுக்­கு­மாறு சவால் விடுத்­தி­ருப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது  என்று கூட்டு எதி­ர­ணியின்   பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல  தெரி­வித்தார்.

அத்­துடன் இறு­தி­யாக நடை­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்வில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க  செயற்­பட்ட விதத்தை  அடிப்­ப­டை­யாகக் கொண்டு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய, தனது பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமாச் செய்வார் என தாம் எதிர்­பார்ப்­ப­தா­கவும்  அவர் குறிப்­பிட்டார்.  

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு பத்­த­ர­முல்ல நெலும்­மாத்­தை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆறு பேரை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­க­வுள்­ளாக பேசப்­ப­டு­கி­றது. எனினும் அவ்­வா­றான சவாலை எதிர்­கொள்­வ­தற்கு நாம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் தயா­ரா­க­வுள்ளோம். அது குறித்த சட்ட ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுள்ளோம்.

மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யினால் நாட்டின் பொரு­ளா­தாரம் படு­பா­தா­ளத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. எனினும் அம்­மோ­ச­டியில் ஈடு­பட்­ட­வர்கள் எது­வித சல­ன­மு­மின்ற அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அவ்­வா­றா­ன­வர்கள் நாட்­டையும் பாரா­ளு­மன்­றத்­தையும் கேலிக்­கூத்­தாக கருதி செயற்­ப­டு­கின்­றனர். எனவே நாட்டை முன்­னேற்றும் எவ்­வித திட்­டமும் அர­சாங்­கத்­திடம் இல்லை.

 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டில் நில­விய சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களை   முன்­வைத்தார். “விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு உல­க­ளா­விய ரீதியி்ல் பலம் பெற்ற அமைப்பு. எனவே அவ்­வி­யக்­கத்­துடன் யுத்தம் செய்ய வேண்டாம். பேச்­சு­வார்த்தை  மூலம் தீர்த்­துக்­கொள்­ளு­மாறு” 26 நாடுகள் கூட்­டாக இணைந்து வேண்­டிக்­கொண்­டன. எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்தை முன்னெடுத்து அதில் வெற்றிபெற்றுக்காட்டினார். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதுகெலும்பு பற்றி சவால் விடுவாராயின் கடந்த கால சம்பவங்களையும் நினைவில் வைத்துக்கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.