Header Ads



அதிகாரபூர்வ அறிவிப்புகள் இல்லை

ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருந்த தேசிய அரசாங்கம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்றுடன் காலாவதியானது.

இந்த உடன்படிக்கை கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. பின்னர், டிசம்பர் 31 வரை அது நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றுடன் காலவதியான உடன்படிக்கையை புதுப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இரு கட்சிகளும் இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரியவருகின்றது.

ஐ.தே.கவுக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மோதல் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், அதிலிருந்து விலகிச் செல்வதிலேயே இருதரப்பிலும் பெரும்பான்மையானோர் கவனம் செலுத்துவதாக அறிய முடிகின்றது.

எனினும், உடன்படிக்கையை நீடிப்பதா? கைவிடுவதா என்பது தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

No comments

Powered by Blogger.