Header Ads



பேஸ்புக்கில் பதிவிட்ட, மாணவர் மரணம் - பிரதேசமே சோகத்தில் மூழ்கியது

 தம்பதெனிய பிரதேசத்தில் நீர் நிரம்பியிருந்த கல் குழியொன்றில் வீழ்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்பதெனிய , மெதவத்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய லக்‌ஷான் சானக என்ற பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும் , குறித்த மாணவர் கருங்கல் உடைப்பால் ஏற்பட்டிருந்த இந்த கல் குழி தொடர்பில் அவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை கடந்த தினத்தில் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடத்தில் காணப்படும் அவதான நிலை தொடர்பில் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்த நிலையில , துரதிஷ்டவசமாக அவரே அந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை அந்த பிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


No comments

Powered by Blogger.