ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்
ஊழல்களுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களுக்கு எதிராகவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
பல்லேவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ராஜபக்ஷ அரசாங்க காலப்பகுதியில் நாட்டின், சட்டங்கள் மீறப்பட்டன.
ஊழல்கள் பரந்தளவில் இடம்பெற்றன.
ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடுபவர்களே உள்ளுராட்சி மன்றங்களின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தனர்.
ஆனால் தற்போது அவற்றுக்கு இடமளிக்காது, ஜனாதிபதி ஊழக்கு எதிராக செற்பட்டு வருவதாகவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க குறிப்பிட்டார்.
Post a Comment