Header Ads



முஸ்லிம் வாக்காளர்களின் கவனத்திற்கு..!


மரத்தில் கழுதை கட்டப்பட்டிருந்தது, அதனைக் கண்ட ஷைத்தான் கழுதை கட்டப்பட்ட கயிரின் முடிச்சை  அவிழ்த்துவிட்டான், கழுதை பக்கத்திலிருந்த தோட்டத்தின் பயிர்களை தின்று முடித்தது, தோட்டத்துக்கு சொந்தக்காரனின் மகன் இதனைக் கண்டு கோபப்பட்டு கழுதையை சுட்டுக் கொலை செய்தான், தனது கழுதையை கொலை செய்ததை அறிந்த கழுதைக்குச் சொந்தக்காரன் தோட்டக்காரனின் மகனை சுட்டுக் கொண்டான், தனது மகனைக் கொலை செய்ததைக் கண்ட தோட்டத்துக்காரன் கழுதைக்குச் சொந்தக்காரனை சுட்டுக்கொண்டான்.

"நீ என்ன செய்தாய்" என்று  ஷைத்தானிடம் கேட்கப்படுகிறது.

"நான் கையிற்றை மட்டும்தான் அவிழ்த்துவிட்டேன்" என்றான் ஷைத்தான். 

ஷைத்தான்  கயிறை அவிழ்த்துவிட்டதுபோல  ஒரே ஒரு ஓட்டுத்தான் நாம் போடுவோம், மற்ற எல்லா கொலை, கொல்லை, ஏமாற்று, துரோகம் போன்ற  கூத்துக்கள்  தானாக நடக்கும். எனவே சிந்தித்து செயல்படுவோம்.

1 comment:

Powered by Blogger.