ஊருக்குள் சண்டித்தனம் செய்த, சிறுத்தை பிடிபட்டது
சிலாபத்தில் சிறுத்தை குட்டியொன்று பெரும் அட்டகாசம் செய்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை உண்ண வரும் சிறுத்தை குட்டியால் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலாபம், பங்கதெனிய, தனபிம பிரதேசத்திலேயே சிறுத்தை குட்டியின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோழிகளை பிடிப்பதற்காக கூட்டுக்குள் சிறுத்தை குட்டி நுழைந்தவுடன் பொது மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
அவ்வாறு பிடித்த சிறுத்தையை புத்தளம் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment