Header Ads



பள்­ளி­வா­சல் சி.சி­.ரி.வி. கெம­ராக்கள் திருட்டு - ஏறாவூரில் சம்பவம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஏறாவூர் காட்­டுப்­பள்­ளி­வா­சலில் பொருத்­தப்­பட்­டி­ருந்த 3 சி.சி­.ரி.வி. கெம­ராக்கள் சனிக்­கி­ழமை அதி­காலை திரு­டப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி பள்­ளி­வாசல் நிரு­வாகம் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளது.

இச்­சம்­ப­வம் ­பற்றிச் சமூக சேவை­யா­ளரும் ஏறாவூர் காட்­டுப்­பள்­ளி­வாசல் தலை­வ­ரு­மான எம்.எல். அப்துல் லத்தீப் மேலும் தெரி­விக்­கையில், 

இந்தக் காட்டுப் பள்­ளி­வா­சலில் முன்னும் பின்­னு­மாக 3 பகு­தி­களில் பொருத்­தப்­பட்­டி­ருந்த காணொளிக் கமெ­ராக்கள் திரு­டப்­பட்­டுள்­ளன.

ஊர் மத்­தியில் இது ஒரு முக்­கி­யத்­துவம் வாய்ந்த இட­மென்­பதால் இங்கு காணொளிக் கெம­ராக்கள் பொருத்­தப்­பட்­டி­ருந்­தன. ஆனால், இவ்­வாறு காணொளிக் கமெரா பொருத்­தப்­பட்­டி­ருந்­தமை சமூக விரோத சக்­தி­க­ளுக்கு இடைஞ்­ச­லாக அமைந்­துள்­ளதன் கார­ண­மா­கவே இதனை இவர்கள் திருடிச் சென்­றி­ருக்­க­லா­மென தான் நம்­புவ­தாகத் தெரி­வித்தார்.

இதே­வேளை காட்­டுப்­பள்­ளி­வாசல் நாற்­சந்­தியில் வெவ்­வேறு இடங்­களில் கடை­களில் பொருத்­தப்­பட்­டி­ருந்த சி.சி.ரி.வி. கெமராக்கள் இதற்கு முன்னரும் 3 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கன.

No comments

Powered by Blogger.