Header Ads



தேர்தல் சட்டத்தை, மீறும் ஜனாதிபதி - பீரிஸ் குற்றச்சாட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்காளர்களை அச்சுறுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் இதன் மூலம் அவர்  தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும கூட, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதமரின் ஊடாக நிதி ஒதுக்கப்படாது என்று கூறியிருக்கிறார்.

இது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாக்காளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். அந்த வாக்குகளை ஐதேகவும், சுதந்திரக் கட்சியும் பெற முனைகின்றன.

உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்குச் சொந்தமானது.  ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் எதுவானாலும், உள்ளூராட்சி சபைகளுக்கு அவற்றை பங்கிட வேண்டும். அந்த நிதி ஒன்றும் பிரதமரினதோ, ஜனாதிபதியினதோ அல்ல.

நிதி ஒதுக்கீட்டை வெட்டுவோம் என்று எச்சரிப்பது, தேர்தல் சட்ட மீறல். அத்துடன் மக்களின் அடிப்படை உரிமையையும் மீறும் செயல்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.