தெல்தோட்டையில் இரத்த தானத்திற்கு ஏற்பாடு
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் 5ஆவது இரத்ததான முகாம். தெல்தோட்டை பள்ளேகம ஹோப் இளைஞர் அபிவிருத்தி சங்கம் (HYDA ) இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த நான்கு வருடங்களாக இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்துவந்துள்ளது.
அதேபோல் இவ்வருடமும் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் ஐந்தாவது இரத்ததான முகாம் எதிர்வரும் சனிக்கிழமை 2017-02-03 ஆம் திகதி தெல்தோட்டை வெடகேபொத இப்றாஹிமிய்யா தொழிநுட்பக்கல்லூரியில் காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளது. ஹோப் இளைஞர் அபிவிருத்தி சங்கம் (HYDA )உடன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா (தெல்தோட்டை கிளை) மற்றும் பிரதேச விளையாட்டு கழகங்கள் இளைஞர் கழகங்கள் இணைந்து இவ்வேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
ஏற்கனவே திடீர் விபத்துக்கள் டெங்கு நோய் போன்றவற்றால் நாட்டின் இரத்த வங்கிகளில் இரத்தப்பற்றாக்குறை உள்ள இவ்வேளையில் நடாத்தப்படும் இவ்விரத்த தான முகாமில் கலந்து கொண்டு உங்கள் இரத்தத்தை தானமாக வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஹோப் இளைஞர் அபிவிருத்தி சங்கம் (HYDA ) பள்ளேகம தெல்தோட்டை
தகவல் ரிஸ்மீ
Post a Comment