Header Ads



கொழும்பு மாநகர தேர்தலை, நிறுத்துமாறு வழக்குத் தாக்கல்

கொழும்பு மாநகர சபை தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி தேசிய மக்கள் கட்சி இன்று உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தது.

இம்முறை உள்ளூராட்சி தேர்தலுக்காக தமது கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ரத்துச் செய்யக்கோரியும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திக சஞ்சீவ , நல்லதம்பி யோகேஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின்  மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீனாத் பெரேரா ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட 14 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.