Header Ads



சவுதியில் இலங்­கைத் தூதரகத்தில், சமைத்தவருக்கு சம்பளம் கொடுப்பதில்லையா..?

சவூதி அரே­பி­யாவில் ஆறு மாதங்­க­ளாக சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மட்­டக்­க­ளப்பு வாக­ரையை சேர்ந்த பெண்­ணொ­ருவர் கடந்த 31 ஆம் திகதி அன்று வீடு வந்து சேர்ந்­துள்ளார்.

வாகரை கண்­ட­ல­டியை சேர்ந்த மாரி­முத்து மகேந்­திராதேவி கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலை­ய­மொன்றின் ஊடாக கடந்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பியா சென்­றி­ருந்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

இரண்டு பிள்­ளை­களின் தாயா­ரான இவர் தனது குடும்ப வறுமை நிலை கார­ண­மாக 4.6.2013 இல் ச­வூ­தி­ அ­ரே­பியா சென்­றி­ருந்தார்.

சவூதி அரே­பியா சென்ற நான் அங்கு 6 மாதங்­க­ளாக ஒரு வீட்டில் பணிப்­பெண்­ணாக வேலை செய்த நேரத்தில் அந்த வீட்டார் எனது கட­வுச்­சீட்­டுடன் சவூ­தி­அ­ரே­பியா றியாத்­தி­லுள்ள முகவர் நிலை­யத்தில் என்னை ஒப்­ப­டைத்­தனர்.

பின்னர் அந்த முகவர் நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யேறி பொலிஸ் நிலை­யத்­திற்கு சென்று முறை­யிட்டேன். 

பொலிஸார் வேறொரு வீட்­டுக்கு என்னை வேலைக்கு அனுப்பி அங்கு வேலை செய்த பின்னர் 17.7.2016 அன்று அந்த வீட்டை விட்டு வெளி­யேறி றியாத்­தி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யத்­திற்கு சென்ற போது அந்த தூது­வ­ராலயத்­தி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு என்னை சமைப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தினர்.

பின்னர் இலங்­கைக்கு எப்­ப­டி­யா­வது வர­ வேண்டும் என நான் மன்­றா­டிய போது சவூதி அரே­பி­யா­வி­லுள்ள வெளி­நாட்­ட­வர்­களை நாட்­டுக்கு அனுப்பும் சிறைச்­சா­லைக்கு அனுப்­பப்­பட்டேன். பின்னர் அங்கு ஆறு மாதங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் கடந்த 31.12.2017 அன்று எனது சொந்த வீட்­டுக்கு வந்து சேர்ந்­துள்ளேன்.

அந்த தூது­வ­­ரா­ல­யத்­தி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு நான் ஒரு வருடம் சமையல் வேலை செய்­துள்ளேன். 

ஆனால் ஒரு ரூபா கூட சம்­ப­ளம் எனக்கு தரவில்லை.  எனது கணவர் கூலித் தொழில் செய்­பவர் எனது பிள்­ளையை படிப்­பிப்­ப­தற்கு மிகவும் கஷ்­டப்­பட்டு பாட­சாலை அதி­பரின் உத­வி­யுடன் மீண்டும் பாடசாலையுடன் இணைத்துள்ளேன்.

எனது நிலை தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.

No comments

Powered by Blogger.