Header Ads



ஜனா­தி­பதி சில அமைச்சுக்களை கைப்பற்றக்கூடும் - தென்­னகோன்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று சுமார் 1098 நாட்கள் நிறை­வ­டைந்து விட்­டன. இன்னும் 696 நாட்கள் மாத்­தி­ரமே உள்­ளன. இதன்­படி மோசடிக் காரர்­களை கைதுசெய்­வ­தாக மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்ற சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்­சுக்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை தன்­வசம் கைய­கப்­ப­டுத்தக்கூடும் என கபே அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார்.

இரா­ஜ­கி­ரி­யவில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தனது பத­விக்­காலம் நிறை­வ­டையும் காலம் எப்­போது என்­பது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு நன்கு தெரியும். இந்­நி­லையில் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 திகதி முதல் 2018 ஆம் ஆண்டு ஜன­வரி 11 வரை­யாகும் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று சுமார் 1098 நாட்கள் நிறை­வ­டைந்து விட்­டன. அப்­ப­டி­யாயின் இன்னும் 696 நாட்கள் மாத்­தி­ரமே உள்­ளன. ஜன­வரி 15 ஆம் திக­தி­யாகும் போது ஜனா­தி­பதி சில விட­யங்­களை நாட்டு மக்­க­ளுக்கு குறிப்­பி­டலாம். அதா­வது  தனது ஐந்து வரு­டங்­களில் மூன்று வரு­டங்கள் நிறை­வ­டைந்து விட்­டன. இன்னும் இரு வரு­டங்­களில் எனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தாக கூறலாம்.   

இதற்­காக அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளாக நீதி, சட்டம் ஒழுங்கு ஆகிய அமைச்­சுக்­களை ஜனா­தி­பதி தன்­வசம் கைய­கப்­ப­டுத்தி கொள்­ளலாம். அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை தன்கையில் எடுத்துக் கொள்ளலாம். தனக்குள்ள அதிகாரத்தை கொண்டு இவ்வாறு செய்வது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடினமான ஒன்றல்ல  என்றார்.

No comments

Powered by Blogger.