Header Ads



உலகின் சிறந்த நிதியமைச்சர் என பெயரெடுத்த, ரவியை கைதுசெய்ய கோரிக்கை

பிணை முறி அறிக்கை வெளியாகும்போது முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் மகேந்திரன், அவரின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைவரையும் உடன் கைது செய்ய வேண்டும் என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -04- நடத்திய பொது எதிரணியின் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கிறோம்.

உலகின் சிறந்த நிதியமைச்சர் என்ற பெயர் எடுத்ததாக தெரிவிக்கப்படும் ரவி கருணாநாயக்க, அர்ஜூன மகேந்திரன், அவரின் மருமகனான அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட, இதனுடன் தொடர்புடைய அனைவரும், குறித்த அறிக்கை வெளியாகும் போது, பிணைஇன்றி விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த குற்றச்செயல்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அரசியல் பலம், அடியாள் பலம், பண பலம் உள்ளது.

இந்த அனைத்து பலத்தையும் வைத்துக் கொண்டு, மோசடிகளை வெளிப்படுத்தியவர்களை அச்சுறுத்துவார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை உடன் கைது செய்ய வேண்டும் எனவும் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.