Header Ads



ரவி கைது செய்யப்படுகிறார்..?

சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரி ஒருவரினால் நடத்தப்படும் இணையம் ஒன்றை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவுக்கு பொய் சாட்சியம் அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது.

அதிபர் ஆணைக்குழுவுக்கு பொய்ச்சாட்சியம் அளிப்பது மோசமான குற்றம் என்றும், இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுபவர் குறைந்தது 3 மாதங்கள் பிணையில் வெளிவர முடியாது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையில், ரவி கருணாநாயக்க பொய்ச்சாட்சியம் அளித்ததாகவும், அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.