வளரும் மனக்குரோதம், சுதந்திரகட் கட்சியின் மூத்தவர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி
கூட்டரசுக்குள் ஏற்பட்டுள்ள குளறுபடி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடி காத்திரமானதொரு முடிவை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ள மேற்படி கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிணைமுறி மோசடி விவகாரம் நாளுக்குநாள் சூடுபிடித்துவருவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான கருத்து முரண்பாடுகளும் வலுப்பெற்றுள்ளன.
இந்தக் கருத்து முரண்பாடுகளால் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கிடையிலும் சில மனக்குரோதங்கள் ஏற்பட்டுள்ளமை ஜனாதிபதியின் மேடைப்பேச்சுகளில் மறைமுகமாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
சமகால முரண்பாடுகள் நாட்டை ஓர் அரசியல் ஸ்திரமற்ற நிலையை நோக்கிக் கொண்டுசெல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மைத்திரி சில அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். அதனடிப்படையிலேயே சமகால விவகாரங்கள் குறித்து கலந்துரையாட சு.கவின் முக்கிய தலைவர்கள் சிலரை எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்புக்கு விரையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment