Header Ads



ரணில் இராஜினாமா செய்தால், நானும் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் - சாமர சம்பத்

பிணை முறி மோசடியே நாட்டில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச்சம்பவம் என ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்வாராயின் தாமும் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

பதுளை மகளிர் மத்திய வித்தியாலயத்தின் அதிபர் பவானியை மண்டியிடவைத்த சம்பவத்திற்கான விசாரணைக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே தாம் கல்வி அமைச்சர் பதவியை விட்டு விலகியதாக தெரிவித்த அவர்,

பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தி சாவால் விட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவரை பதுளை காவல் நிலையத்திற்கு வருகை தருமாறும்,

காவல் நிலையத்தில் தனது பெயர் குறிப்பிடப்பட்ட முறைப்பாடுகள் காணப்படுகின்றதா என ஆராயுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை முதலமைச்சரை கைது செய்யுமாறு வலியுறுத்தி மகளிர் பாடசாலைக்கு முன்பதாக ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1 comment:

Powered by Blogger.