சக்திவாய்ந்த அமைச்சரும் சிக்கினார்
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகாரமீறல்கள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு, தற்போதைய கூட்டு அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரும், குற்றமிழைத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த தகவலை சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார்.
குறித்த அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் பின்நிற்கமாட்டார் என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment